சென்னை,
அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கட்சி ரீதியான மாவட்டங்கள் வாரியாக வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலான 4 நாட்கள் அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் திட்டமிடப்பட்டு உள்ளன. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.
இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன், நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்போடு நடத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S