Tamil News & polling
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும், அவர் தவிர்த்தார்.
இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். 2வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றது பேசுபொருளாகி உள்ளது.
இந்நிலையில் செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார் என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஏன் தவிர்த்தார் என்று அவரை போய் கேளுங்கள்' ... அவர கேட்டாதானே காரணம் தெரியும். இங்க இன்னும் நிறைய பேர் வரல... அதலாம் கேக்குறீங்களா? நான் என்னைக்குமே யாரையுமே எதிர்பார்ப்பதில்ல..
தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். நாங்க சுதந்திரமா செயல்படுகிற கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.
கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்
உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத
விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை