POLLING FLAMES 📊 TN ELECTION 2026
வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.
சென்னை: "மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் செல்வாக்கற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்து ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும்" என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று இரண்டாம் நாளாகப் பிரசாரம் மேற்கொண்டார். ராகுலின் இந்த வருகை குறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.
அண்ணாமலை தனது பேட்டியில் ராகுல் காந்தி மற்றும் திமுக கூட்டணி குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்:
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி தற்போது இரண்டாவது முறையாகத் தமிழகம் வந்துள்ளார். இருப்பினும், கூட்டணிக் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவர் இதுவரை நேரில் சந்தித்துப் பேசவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rahul should be concerned about the Congress party, which is non-existent in Tamil Nadu! — Annamalai.வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!.
« முந்தைய செய்தி (Previous)
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: