அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபுவால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியாக புகார் அளித்துள்ளார்.
வாக்குப் பதிவு நாளில் (ஏப். 23) சேகர்பாபுவுடன் வந்தவர்கள் தன்னைத் தாக்கியதாவும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் தன்னைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சேகர்பாபு மீதான புகாரில் சினோரா அசோக் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் சினோரா அசோக் மற்றும் சேகர்பாபு ஆகிய இருதரப்பினரிடையே பிரசாரத்தின்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு நாளில் இரு தரப்பினரும் நேருக்குநேர் மோதிக் கொண்டனர். இரு தரப்பினருக்குமான மோதலை காவல்துறையினரும் துணை ராணுவப் படையினருமே விலக்கி வைத்தனர்.இந்த நிலையில்தான், சேகர்பாபு மீது சினோரா அசோக் புகார் அளித்துள்ளார்.
« முந்தைய செய்தி (Previous)
தவெக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்; செங்கோட்டையன்...அடுத்த செய்தி (Next) »
விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: