இந்தியா – நியூசிலாந்து அணிக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து அணி தொடரை வென்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்கள் சொதப்பினர். கில் (13), தவான் (28), பண்ட் (10), சூர்யாகுமார் யாதவ் (6),தீபக் ஹுடா (12) என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர்.