தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
”18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவிக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி” என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சோகம் இழையோடுவதையும் காண முடிகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?
சிவகார்த்திகேயன் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் அப்பா இறந்துபோனார். குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில், தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமை மூலம் வாழ்க்கையில் முன்னேறினார் இந்தக் கலைஞர்.
மிமிக்ரி செய்து தொண்டை வலித்தாலும், அதைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தது. அவரது திறமையும், விடா முயற்சியும் உழைப்பும் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!