INDIAN 7

Tamil News & polling

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

18 அக்டோபர் 2024 08:12 AM | views : 143
Nature

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கனமழையை கொடுத்து சென்னை அருகே கடந்து சென்றது.

இதையடுத்து வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உள்பட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

20, 21 ஆகிய தேதிகளில் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்