நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. முதல் மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இரண்டரை மணி நேரம் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ஒரு பெரிய தரைப்படை உருவாகும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், ஒரு திரைப்படம் தான் உருவாகி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி விஜய். முதலில் வாழ்த்துக்கள்."
"அங்குள்ள நல்ல விஷயங்களை முதில் கூறுகிறேன். நேர்மறை கருத்துக்களை சொல்கிறேன். போட்டியிடுவதில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு வழங்குவது, மிகப்பெரிய தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தியது. கடவுள் மறுப்பு கொள்கை எங்கள் கொள்கை இல்லை என்று சொன்னது. ஊழலுக்கு எதிராக நான் போராடுவேன் என்று சொன்னது, பனை மரத்தை மாநில மரமாகவும், பதநீரை மாநில நீராக அறிவிப்போம் என்று சொன்னது. வெற்றி பெற்று ஆட்சி வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று சொன்னது ஆரோக்கியமான சூழ்நிலையாக நினைக்கிறேன்."
"எதிர்மறை என்று பார்க்கும் போது, எங்களது எதிரிகளை நான் நிலைநிறுத்திவிட்டேன். சாதி, மத, இன, பாலின பாகுபாட்டை எதிர்க்கிறேன் என்று திருப்பி, திருப்பி கூறுகிறார்கள். அதில் அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. அப்படி சொல்லிவிட்டு, இதை எதிர்ப்பதால் எங்கள் கொள்கை எதிரியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்று மறைமுகமாக அவர் எங்களைத் தான் கூறுகிறார்," என்று தெரிவித்தார்.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக – தவெக கூட்டணி என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று தகவல் பரவியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!