INDIAN 7

Tamil News & polling

கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை

By E7 Tamil 13 அக்டோபர் 2021 07:03 AM
Nature

சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், இரு ஆட்டங்களில் மொத்தமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கடைசி 5 ஆட்டங்களில் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் போட்டியின் பாதியில் அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியை விட்டு வார்னர் விலகுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின. 2016-ல் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த வார்னர் கூறியதாவது: என்னை அணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அணி உரிமையாளர்கள், டிரெவர் பேலிஸ், லக்‌ஷ்மண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அது ஒருமித்த கருத்தாக இருந்திருக்கும்.

ஆனால் யார் உங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது தெரியவில்லை. கடைசியில் நான் விளையாடவில்லை என்பதுதான் தெரிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணத்தை என்னிடம் விளக்கவில்லை. இது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நன்றாக விளையாடாதது தான் காரணம் என்றால் இது சிக்கலானது. முன்பு எப்படி விளையாடினீர்கள் என்பது தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஒரு காரணமாக இருக்கும். மேலும் இந்த அணிக்காக நான் 100 (95) ஆட்டங்கள் விளையாடியுள்ளேன்.

நான்கு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. அதில் சென்னையில் நடைபெற்ற ஆட்டங்களில் இரண்டு ரன் அவுட்கள். இந்த நிலையை ஜீரணிப்பது கடினம். என் கேள்விக்கான விடை எனக்கு எப்போது கிடைக்காது என எண்ணுகிறேன். நான் தொடர்ந்து இயங்கவேண்டும். இன்னொரு ஏலம் வரப்போகிறது. சன்ரைசர்ஸ் அணிக்காக நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். ஆனால் இதன் முடிவு அணியின் உரிமையாளர்களிடம் உள்ளது. ஆனால் வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு அணியில் என்னைத் தக்கவைத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. 2022 ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன். அணிக்குத் தலைமை தாங்கவும் நான் தயார் என்றார்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை Chennai அதிமுக தமிழக வெற்றிக் கழகம் கனமழை அண்ணாமலை Annamalai MK Stalin திருமாவளவன் ADMK Tamil Nadu பாஜக AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு BJP இந்திய அணி முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் TVK Conference Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் AMMK தமிழ்நாடு தமிழக வெற்றிக்கழகம் Sengottaiyan PMK தீபாவளி Northeast Monsoon மு.க.ஸ்டாலின் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் Rain பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் VCK தென்காசி பாமக தவெக விஜய் Thoothukudi Tirunelveli விசிக உதயநிதி ஸ்டாலின் GetOut Stalin அமரன் நடிகை கஸ்தூரி IMD TVK Vijay திருச்செந்தூர் பாலியல் தொல்லை மதுரை Edappadi Palaniswami டிடிவி தினகரன் வானிலை Congress தமிழகம் விடுமுறை தூத்துக்குடி Heavy Rain திமுக அரசு இந்தியா சட்டசபை தேர்தல் M.K. Stalin Ajith கோலிவுட் திருநெல்வேலி Ind vs Nz தனுஷ் GetOut Modi rain Washington Sundar வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran கைது