யாஷிகா இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை இல்லை! பிக்பாஸ் வீட்டில் நிரூப் நந்தகுமார்!

யாஷிகா இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை இல்லை! பிக்பாஸ் வீட்டில் நிரூப் நந்தகுமார்!

  அக்டோபர் 15, 2021 | 06:20 am  |   views : 1956


பிக் பாஸ் 5க்கு வந்தது எப்படி, முன்னாள் காதலி யாஷிகா பற்றியும் ஓப்பனாக பேசி இருக்கிறார் நிரூப். என்ன கூறி உள்ளார் என பாருங்க.




என் பெயர் நிரூப், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை அயனாவரம் அருகில் எங்கோ பிறந்தேன். நான் சின்ன வயதில் இருந்தே பள்ளியில் ரொம்ப சைலன்ட் ஆன ஒரு பையன். நானும் யாருடனும் நேரம் எடுத்து பேச மாட்டேன், என்னுடனும் யாரும் எப்ப மாட்டாங்க.



நான் 9ம் வகுப்பு படிக்கும்போது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடக்கிறது. எனது அம்மாவிற்கு Schizophrenia என்கிற நோய் இருக்கிறது என கண்டுபிடித்தார்கள். அது ஒரு mental disorder. அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது.




Also read...  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு



நான் 10ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் சேர்ந்தேன். அப்போது தான் எனக்கு வாழ்க்கையா பல விஷயங்களை சொல்லி கொடுத்தது. நான் சேர்ந்த கல்லூரியில் படித்தவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. அவர்கள் சென்னை லோக்கல் ஸ்லாங்கில் பேசினார்கள். எனக்கு தமிழ் தெரியாது என அவர்களிடம் பொய் கூறியவிட்டேன். ஒருவாரத்தில் அவர்கள் நம்பிவிட்டார்கள்.



அதன் பின் அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக நடித்தேன். அவர்கள் உடன் பேசவே வேண்டாம் என நினைத்தேன், அதனால் தான் அப்படி சொன்னேன். சில மாதங்களுக்கு பிறகு தான் அவர்களை பற்றி எல்லாம் என தெரியவந்தது. என் உடன் தான் இருப்பார்கள், ஆனால் என்னை பற்றியே தவறாக பேசுவார்கள்.



மூன்று வருடம் அப்படியே நடித்தேன், எனக்கு தமிழ் தெரியும் என தற்போது அவர்களுக்கு தெரிந்தால் கூட அவர்களுக்கு ஷாக் ஆக இருக்கும். அந்த காலகட்டத்தில் நான் மனிதர்கள் பற்றி நான் அதிகம் புரிந்துகொண்டேன்.





நான் டிப்ளமோவில் டிஸ்டின்க்ஷன் வாங்கி பாஸ் செய்தேன். அதன் பின் எஸ்ஆர்எம் கல்லூரியில் ஸ்கலர்ஷிப் உடன் பிடெக் படிக்க சேர்ந்தேன். ஆனால் எனக்கு சர்டிபிகேட் வேண்டாம் என் அப்பாவிடம் கூறிவிட்டேன்.



அதன் பின் மாடலிங் செய்யபோவதாகக் கூறினேன். ஆனால் உனக்கு தான் யாருமே தெரியாதே என அப்பா சொன்னார். அந்த நேரத்தில் தான் நான் யாஷிகாவை பார்த்தேன். நான் பிக் பாஸ் வருகிறேன் என சொன்னபோது யாஷிகாவின் முன்னாள் காதலர் வருகிறார் என செய்திகள் போட்டார்கள். அவர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட எனக்கு அது பெருமையான விஷயம்தான். அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. உனக்கு அசிங்கமாக இல்லையா என சிலர் என்னிடமே கேட்டார்கள். இதிலென்ன அசிங்கம், அது தான் உண்மை எனக்கு அவர்தான் ஒரு வாழ்க்கையை காட்டினாள். ஏன் மக்கள் தவறாக நினைக்கிறார்கள், ஒரு பெண்ணால் பையன் வளரவே கூடாதா.




எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. பிக் பாஸ் வந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும் என எனக்கு தெரியும். நான் பல அடிக்ஷன் சென்று இருக்கிறேன். என் உயரத்தை பார்த்து பலரும் நிராகரித்து விடுவார்கள்.



பிக் பாஸ் வந்தால் புகழ் கிடைக்கும் அதன் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் உயரத்திற்கு போகிற போது தான் என்னால் இன்னும் பத்து பேருக்கு உதவ முடியும் என கதையை சொல்லி முடித்தார் நிரூப்.



யாஷிகா பற்றி ஓப்பனாக பேசிய அவரை பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் பலரும் பாராட்டினார்கள்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 1 day ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 1 day ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 5 days ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 6 days ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 week ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 week ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 1 week ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 1 week ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என