Tamil News & polling
பிக் பாஸ் 5க்கு வந்தது எப்படி, முன்னாள் காதலி யாஷிகா பற்றியும் ஓப்பனாக பேசி இருக்கிறார் நிரூப். என்ன கூறி உள்ளார் என பாருங்க.
என் பெயர் நிரூப், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை அயனாவரம் அருகில் எங்கோ பிறந்தேன். நான் சின்ன வயதில் இருந்தே பள்ளியில் ரொம்ப சைலன்ட் ஆன ஒரு பையன். நானும் யாருடனும் நேரம் எடுத்து பேச மாட்டேன், என்னுடனும் யாரும் எப்ப மாட்டாங்க.
நான் 9ம் வகுப்பு படிக்கும்போது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடக்கிறது. எனது அம்மாவிற்கு Schizophrenia என்கிற நோய் இருக்கிறது என கண்டுபிடித்தார்கள். அது ஒரு mental disorder. அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது.
நான் 10ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் சேர்ந்தேன். அப்போது தான் எனக்கு வாழ்க்கையா பல விஷயங்களை சொல்லி கொடுத்தது. நான் சேர்ந்த கல்லூரியில் படித்தவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. அவர்கள் சென்னை லோக்கல் ஸ்லாங்கில் பேசினார்கள். எனக்கு தமிழ் தெரியாது என அவர்களிடம் பொய் கூறியவிட்டேன். ஒருவாரத்தில் அவர்கள் நம்பிவிட்டார்கள்.
அதன் பின் அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக நடித்தேன். அவர்கள் உடன் பேசவே வேண்டாம் என நினைத்தேன், அதனால் தான் அப்படி சொன்னேன். சில மாதங்களுக்கு பிறகு தான் அவர்களை பற்றி எல்லாம் என தெரியவந்தது. என் உடன் தான் இருப்பார்கள், ஆனால் என்னை பற்றியே தவறாக பேசுவார்கள்.
மூன்று வருடம் அப்படியே நடித்தேன், எனக்கு தமிழ் தெரியும் என தற்போது அவர்களுக்கு தெரிந்தால் கூட அவர்களுக்கு ஷாக் ஆக இருக்கும். அந்த காலகட்டத்தில் நான் மனிதர்கள் பற்றி நான் அதிகம் புரிந்துகொண்டேன்.
நான் டிப்ளமோவில் டிஸ்டின்க்ஷன் வாங்கி பாஸ் செய்தேன். அதன் பின் எஸ்ஆர்எம் கல்லூரியில் ஸ்கலர்ஷிப் உடன் பிடெக் படிக்க சேர்ந்தேன். ஆனால் எனக்கு சர்டிபிகேட் வேண்டாம் என் அப்பாவிடம் கூறிவிட்டேன்.
அதன் பின் மாடலிங் செய்யபோவதாகக் கூறினேன். ஆனால் உனக்கு தான் யாருமே தெரியாதே என அப்பா சொன்னார். அந்த நேரத்தில் தான் நான் யாஷிகாவை பார்த்தேன். நான் பிக் பாஸ் வருகிறேன் என சொன்னபோது யாஷிகாவின் முன்னாள் காதலர் வருகிறார் என செய்திகள் போட்டார்கள். அவர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட எனக்கு அது பெருமையான விஷயம்தான். அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. உனக்கு அசிங்கமாக இல்லையா என சிலர் என்னிடமே கேட்டார்கள். இதிலென்ன அசிங்கம், அது தான் உண்மை எனக்கு அவர்தான் ஒரு வாழ்க்கையை காட்டினாள். ஏன் மக்கள் தவறாக நினைக்கிறார்கள், ஒரு பெண்ணால் பையன் வளரவே கூடாதா.
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. பிக் பாஸ் வந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும் என எனக்கு தெரியும். நான் பல அடிக்ஷன் சென்று இருக்கிறேன். என் உயரத்தை பார்த்து பலரும் நிராகரித்து விடுவார்கள்.
பிக் பாஸ் வந்தால் புகழ் கிடைக்கும் அதன் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் உயரத்திற்கு போகிற போது தான் என்னால் இன்னும் பத்து பேருக்கு உதவ முடியும் என கதையை சொல்லி முடித்தார் நிரூப்.
யாஷிகா பற்றி ஓப்பனாக பேசிய அவரை பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் பலரும் பாராட்டினார்கள்.

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு
கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்